முன்களப் பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் ஊக்கத்தொகை அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில் முன்களத்தில் நின்று பணியாற்றி வரும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.