தற்போதைய செய்திகள்

17 மாநிலங்களுக்கு ரு. 9,871 கோடி விடுவித்தது மத்திய அரசு

DIN

வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடியை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

இதில் தமிழகத்திற்கு 3வது தவணையாக ரூ.183.67 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சேர்த்து மொத்தம் ரூ. 551 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

நிகழ்வாண்டில் வருவாய் பற்றாக்குறை மானியம் மூன்றாம் தவணையாக 17 மாநிலங்களுக்கு ரூ. 9,871 கோடி விடுவிக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் மொத்தம் ரூ. 29,613 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கேரளாவிற்கு மொத்தம் 4,972.74 கோடியும், மேற்கு வங்கத்திற்கு மொத்தம் 1,467.25 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021-22 நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு 12 மாத தவணைகளாக மொத்தம் ரூ. 1,18,452 கோடி விடுவிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT