தற்போதைய செய்திகள்

ஆமதாபாத்தில் இரவுநேர பொதுமுடக்கத்தின் நேரம் நீட்டிப்பு: திரையரங்குகள் மூடல்

ANI

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஆமதாபாத்தில் இரவு நேர பொதுமுடக்க நேரத்தை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு வந்த பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதையடுத்து, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத். ராஜ்கோட், சூரத் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகளில் மார்ச் 17 முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுமுடக்கம் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆமதாபாத்தில் மட்டும் இரவுநேர பொதுமுடக்கமானது இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT