கரோனா நோயாளிகளுக்கு நாளைமுதல் தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
கரோனாவால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், உடனிருப்போருக்கு நாளைமுதல் ரூ. 30 லட்சம் செலவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதிய உணவு வழங்கப்படும்.
தமிழக கோயில்கள் சார்பாக நாள்தோறும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.