தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் அமலாகவுள்ள நிலையில், இன்றும், நாளையும் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்,
இன்றும் நாளையும் கடை திறப்பு
பொது மக்கள் நலன் கருதி, இன்று (22-5-2021) இரவு 9-00 மணி வரையிலும், நாளை 23.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மால்கள் திறக்க அனுமதி கிடையாது.