தற்போதைய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள்: பிசிசிஐ

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

14ஆவது ஐ.பி.எல். தொடரின் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 4 அணிகளின் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மே 4ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை இன்னும் குறையாத காரணத்தால் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலியுடனான கூட்டத்திற்கு பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியது,

மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் துபை, சார்ஜா மற்றும் அபுதாபியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT