ஐ.பி.எல். கோப்பை - 2021 
தற்போதைய செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள்: பிசிசிஐ

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

14ஆவது ஐ.பி.எல். தொடரின் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 4 அணிகளின் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மே 4ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை இன்னும் குறையாத காரணத்தால் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலியுடனான கூட்டத்திற்கு பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியது,

மீதமுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் துபை, சார்ஜா மற்றும் அபுதாபியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT