ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. கொல்கத்தாவில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104, ரசல் 21, ரிங்கு சிங் 18 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய மும்பை அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் இஷான் கிசன் 58, சூர்யகுமார் யாதவ் 43, திலக் வர்மா 30 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டார்.
அதேசமயம் ரோஹித் சர்மா இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார்.