கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

ஏழுமலையான் தரிசிக்க பக்தா்கள் 24 மணி நேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் இன்று சுமார் 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் இன்று சுமார் 24 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு ரூ.300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என பல்வேறு வகையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இன்று காலை 22 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவர்களுக்கு சுமார் 24 மணி நேர காத்திருப்புக்குப் பின்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டது.

ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரமும் தேவைப்பட்டது.

சனிக்கிழமை அன்று 75,652 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இதில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ. 3.21 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT