முக்கியச் செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல்வர் நிதி உதவி

DIN

அருணாசலபிரதேசம் தவாங் மாவட்டம் யாகேஷ் செக்டாரில் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் நேற்று (6.10.2017)  விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரெஜிமெண்ட் ராணுவ வீரர் பாலாஜி உள்பட 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த விபத்து குறித்து செய்தி அறிந்ததும்  நான் மிகுந்த துயரமும்,  மன வேதனையும்  அடைந்தேன் . மேலும்  ராணுவ வீரர் பாலாஜி-யை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். பாலாஜி குடும்பத்திற்கு  இருபது  லட்சம் ரூபாய் நிதி உதவி உடனடியாக  வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT