பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 16 பேர் பலி
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக் கிழமை தொழுகையின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் 16 பேர் பலியாகினர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அவர்களில் சிலரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பினர் யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.