தற்போதைய செய்திகள்

பிறந்த உடனே நடக்கத் தொடங்கியது சிசு! இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ!

பார்த்து நீங்களும் பரவசப் பட்டுக் கொள்ளுங்கள்... பிறந்த சிசு நடக்கும் வீடியோவை இது தான்... 

கார்த்திகா வாசுதேவன்

பிறந்த சிசு என்றாலே அது கடவுளுக்கு இணையென்பது நம் அனைவரின் கருத்து. பிறந்து பூமியில் விழும் ஒவ்வொரு குழந்தையுமே அன்றலர்ந்த சின்னஞ்சிறு பூக்குவியலே! அதனால் கைகால்களை அசைக்க முடியும், தாயின் கருவறை இருட்டிலிருந்து சட்டென்று வெளிவந்து விட்டதால் இந்த பூமியின் வெளிச்சத்தை பழகிக் கொள்ள இயலாமல் இன்னதென்று புரியாது சட், சட்டென்று வீறிட்டு அழும். ரோஜாப்பூ உதடுகள் கோணிக் கொள்ள பிறந்த, உடல் ரத்தம் முழுதையும் முகத்திற்கு ஏற்றி பிறந்த சிசு அழுவது கூட கொள்ளை அழகு! இவை மட்டுமே பிறந்த புதுக்கருக்கு அழியாத சிசுவின் இயல்புகள்.

ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் குழந்தை அப்படியல்ல. இது ரொம்பவே வித்யாசமான குழந்தை. தன்னை கையிலேந்தி நிற்கும் மருத்துவரின் கையின் பலம் கொண்டு அது நடப்பதைப் பாருங்கள். குழந்தை புரண்டு விழவே மூன்று மாதங்கள் தேவைப்படும். இடுப்பு பலம் பெற்றால் தான் குழந்தையால் குப்புறக் கவிழாமல் உட்கார முடியும். இத்தனை விசயங்கள் இருக்க இந்த ஆண்குழந்தை பிறந்ததும், தன்னைப் பற்றியிருக்கும் மருத்துவரின் கைகளின் பலத்துடன் சில இஞ்ச் தூரம் நடப்பது பார்க்கப் பார்க்கக் கொள்ளை அழகு மட்டுமல்ல அதிசயமும் கூடத்தான்.

பார்த்து நீங்களும் பரவசப் பட்டுக் கொள்ளுங்கள்... பிறந்த சிசு நடக்கும் வீடியோவை இது தான்... 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கத் தேரழகு... துஷாரா விஜயன்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மஞ்சலோக மேனி... கெளரி கிஷன்!

பெங்காலி திரைப்பட ஒளிப்பதிவாளர் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு

நெல்லையில் கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT