தற்போதைய செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை: தெலங்கானா முதல்வர் அலுவலகம்

DIN

தெலுங்கானா: தெலங்கானாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெலங்கானா முதல்வர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அதை தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ஊரடங்கை ஜூன் 3 வரை நீட்டிப்பதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது.

இதையடுத்து, தெலங்கானா முதல்வர் அலுவலகம் இதுதொடர்பாக விளக்கமளித்ததாவது:

"தெலங்கானாவில் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் பரிந்துரைத்துள்ளார். இந்தியாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டித்தால் நல்லது என்ற பிசிஜி அறிக்கையை மட்டுமே அவர் குறிப்பிட்டார். எனவே, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT