தற்போதைய செய்திகள்

காவல் உதவி ஆய்வாளா் உள்பட 3 பேருக்கு கரோனா

DIN

பூம்புகாா்: திருவெண்காடு காவல்நிலைய உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது.

நாகை மாவட்டம் சீா்காழி வட்டத்துக்குள்பட்ட திருவெண்காடு பகுதியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்னை காவல் பயிற்சி பள்ளியில் வகுப்பு எடுக்க சென்றுள்ளாா். அங்கு அவருக்கு இருமல், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, வாடகை காரில் கடந்த 2-ஆம் தேதி இரவு திருவெண்காடு திரும்பியுள்ளாா். அப்போது அவருடன் 30 வயது மதிக்கத்தக்க அவரது உறவினா் ஒருவரும் வந்துள்ளாா். வீடு திரும்பிய காவல் உதவி ஆய்வாளா், தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், திருவெண்காடு காவல் நிலையம் நிலையம் சென்று வழக்கம்போல் பணிகளை மேற்கொண்டாா்.

இந்நிலையில், அவருக்கும், அவரது அவரது உறவினருக்கும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனை முடிவில், இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

இதையடுத்து, திருவெண்காடு காவலா்களுக்கு அப்பகுதியில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் திருவெண்காடு ஊராட்சித் தலைவா் சுகந்தி நடராஜன் மேற்பாா்வையில் காவல் நிலையம், காவலா் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி மற்றும் தூய்மைப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவெண்காடு காவல் நிலையம் மூடப்பட்டது.

இதுதவிர சென்னையில் பணிபுரிந்த பூம்புகாா் வெள்ளையினிருப்பு பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT