அசனமாப்பேட்டை கிராமத்தில் கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டம்
செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டை கிராமத்தில் நெசவாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கக் கோரி கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) ஈடுபட்டனர்.
செய்யாறு: செய்யாறை அடுத்த அசனமாப்பேட்டை கிராமத்தில் நெசவாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கக் கோரி கஞ்சி தொட்டி திறந்து நெசவாளர்கள் போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அசனமாப்பேட்டை கிராமத்தில் நெசவாளர்கள் நிவாரணம் வழங்கக் கோரி கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் வாழ்வாதாரம் இழந்த செநவாளர் குடும்பங்களுக்கும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்களுக்கும் தமிழக அரசு ரூ.2 ஆயிரம் நிவராணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தாகத் தெரிகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை இது நாள் வரையில் நெசவாளர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், அந்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும், மேலும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நெசவாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அசனமாப்பேட்டை, தென்கழனி, பெருமாந்தாங்கல், பெருங்கட்டூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.