தற்போதைய செய்திகள்

இடிவிழுந்து புளியமரம் பற்றியெரிந்தது: தென்னங்கீற்றுகள் நாசம் 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு, இடி விழுந்ததில், புளியமரம் தீப்பற்றி எரிந்தது.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு, இடி விழுந்ததில், புளியமரம் தீப்பற்றி எரிந்தது. மரத்திற்குக் கீழே அடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தென்னங்கீற்றுகளும் எரிந்துநாசமானது.

வாழப்பாடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணி முதல் 7.10 வரை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது பொன்னாரம்பட்டி கிராமத்தில், சாலையோரத்தில் இருந்த, 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் மீது, இடி விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது.

மரத்திற்கு அடியில் கூலித்தொழிலாளர்கள் முடைந்து அடுக்கிவைத்திருந்த நூற்றுக்கணக்கான தென்னங்கீற்றுகளும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்து, குடியிருப்பு பகுதிகளுக்குத் தீ பரவாமல் தடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT