தற்போதைய செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு

DIN

செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் நாளை (நவம்பர் 26) காலைக்குள் 20 செ.மீ. அளவு மழைப்பொழிவிற்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயலின் தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி புதன்கிழமை மதியம் 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளை காலைக்குள் 20 செ.மீ. அளவு மழைப்பொழிவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கன அடிநீர் நீர்வரத்து இருக்கும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் அடையாறு கரையோரப் பகுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT