முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் 

கிருஷ்ணகிரியில் மனைவியை கொலை செய்த கணவர் ஒசூர் நகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை  சரணடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
கோப்புப்படம்
பகிர்:


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மனைவியை கொலை செய்த கணவர் ஒசூர் நகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை  சரணடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள பிராமின் தெருவைச் சேர்ந்தவர் சென்னபசப்பா(44) அங்குள்ள கோவிலில் குருக்கள் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கௌரம்மா(40).  இந்த தம்பதிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

கௌரம்மாவுக்கும் வேறு ஒரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். இதை கணவன் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் மனைவியை வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.என். போடூர் பஸ்வெஸ்வரப்பா கோயிலுக்கு அழைத்துச் சென்று, கோயிலுக்கு பின்புறம் வைத்து கொலை செய்துள்ளார் கணவர் சென்னபசப்பா.

பின்னர்,  ஒசூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்த சென்னபசப்பாவை அழைத்து வந்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த நிகழ்வு இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →