தற்போதைய செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்: சுகாதாரச் செயலர்

DIN

தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களில் 37 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதார முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் முதல்தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்கள் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

மாநிலத்தில் இதுவரை மொத்தம் உள்ள முன்களப் பணியாளர்களில் 80 சதவிகிதத்தினர் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர்களில் 37 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

நாட்டில் பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் அதிக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1.39 லட்சம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT