ஆந்திரம்: ஆந்திரம் மாநிலம் ரேணிகுண்டாவில் ரயில்வே பாதுகாப்பு படையின் தலைமை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆந்திரம் மாநிலம் ரேணிகுண்டாவில் ரயில்வே பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆன்ந்தராவ். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை அலுவலக ஸ்டோர் ரூமில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.