தற்போதைய செய்திகள்

மானாமதுரை பேரூராட்சி புதிய பெண் செயல் அலுவலர் பொறுப்பேற்பு

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலராக இளவரசி பொறுப்பேற்றுக் கொண்டார்.

மானாமதுரை பேரூராட்சிக்கு பல மாதங்களாக செயல் அலுவலர் நியமிக்கப்படாத நிலை இருந்து வந்தது. இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் கூடுதல் பொறுப்பாக மானாமதுரை பேரூராட்சி நிர்வாகத்தையும் கவனித்து வந்தார்.

இதையடுத்து மானாமதுரை  பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

இதையடுத்து தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த இளவரசி அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் இளவரசி செயல் அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். மானாமதுரை பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மானாமதுரை பேரூராட்சிக்கு முதல் முறையாக பெண் ஒருவர் செயல் அலுவலராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT