காலமானார்: பா.ரவி
காட்டுக்கோட்டை கே.எஸ். பாலனின் இளைய மகன் பா.ரவி (53) சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
சென்னை: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கே.எஸ். பாலனின் இளைய மகன் பா. ரவி (53) சென்னையில் சனிக்கிழமை காலமானார். உடல்நலக் குறைவுக்காக சிறிது காலம் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
மறைந்த ரவிக்குத் தாய் சகுந்தலா, சகோதரி சுஜாதா ஆகியோர் உள்ளனர். அவரது மூத்த சகோதரர் பா. முத்துக்குமரன், 'தினமணி' சென்னை பதிப்பில் செய்தி ஆசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு 9171382356