பிப். 24-ல் சென்னைப் புத்தகக் காட்சி
சென்னையில் புகழ்பெற்ற சென்னைப் புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னையில் புகழ்பெற்ற சென்னைப் புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்குகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பெறும் 44-வது புத்தகக் காட்சி இது.
கரோனா காரணமாக நிச்சயமின்றி இருந்த நிலையில், வழக்கமாக ஜனவரியில் நடத்தப்படுவது தள்ளிச் சென்று, தற்போது பிப்ரவரியில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நான்கு நாள்கள் புத்தகக் காட்சி நடைபெறும் எனத் தகவலறிந்த பபாசி வட்டாரங்கள் தெரிவித்தன.