முகப்பு
தற்போதைய செய்திகள்

‘வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமல் ஓய மாட்டோம்’: ராகேஷ் திகைத்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம் என அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம் என அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 170 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். 

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ராகேஷ் திகைத்,  வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது நிச்சயம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை நாங்கள் ஓய மாட்டோம். மத்திய அரசின் ஆட்சிக் காலம் முடியும் 2024 ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்” என ராகேஷ் திகைத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →