FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பொதுத் துறை வங்கிகளில் விரைவில் விருப்ப ஓய்வுத் திட்டம்?

பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் விருப்ப ஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 9 ஜூன் 2021, 11:01 am IST
பொதுத் துறை வங்கிகளில் விரைவில் விருப்ப ஓய்வுத் திட்டம்?
பகிர்:

பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் விருப்ப ஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி ஆயோக் அமைப்பின் பரிந்துரைக்கேற்ப இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாகவும் இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தனியார்மயமாக்கும் திட்டத்துக்கு இடையே இதேபோன்ற விருப்ப ஓய்வுக்கான பரிந்துரைகளை ஏர் இந்தியா மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கும் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. இதுபற்றித் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

ஊழியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே நிர்வாக மாற்றம் எளிதாக இருக்கும் என்றும் நிதியமைச்சக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

அதிகளவிலானோர் விரும்பி வெளியேறும் வகையில் மத்திய அரசு அறிவிக்கும் விருப்ப ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2021-22 நிதிநிலை அறிக்கையில் இரு பொதுத் துறை வங்கிகளையும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்கும் பணியை அரசு தொடங்கவுள்ளதாக நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments