தற்போதைய செய்திகள்

கண்ணதாசன் பிறந்த தினம்: உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை

DIN

சென்னை: கவிஞர் கண்ணதாசனின் 95 -ஆவது பிறந்த தினம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு அரசின் சார்பில் தியாகராய நகர் கோபதி நாராயணன் சாலையில் உள்ள கவியரசு கண்ணதாசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் கண்ணதாசன் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதேபோன்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசைசௌந்தரராஜன் கண்ணதாசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில்  உள்ள மார்பளவு சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதணன் ரெட்டி, அரசு சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT