தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் திமுக-சிபிஐஎம் இடையே தொடரும் இழுபறி
திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிகளை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
நடைபெற உள்ள தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிகளில் தொகுதிகளைப் பங்கீடு செய்வது மற்றும் இறுதி செய்வது, வேட்பாளர்களை அறிவிப்பது என தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக. விசிக, காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதிகளை இறுதி செய்துவிட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் திமுக உடனான தொகுதிகளை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
சிபிஐஎம் போட்டியிட விரும்பிய தொகுதிகளை காங்கிரஸ் கோரியதால் இழுபறி நீடித்து வந்ததாக தகவல் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி போடியிடும் தொகுதிகளை இறுதி செய்து வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் சிபிஐஎம் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவாகவில்லை. சிபிஐஎம் கேட்ட பத்மநாபபுரம். திருப்பூர் தெற்கு, மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகள் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதுதொடர்பாக திமுக தலைவர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஒப்பந்தம் நாளை இறுதியாகும் எனத் தெரிகிறது.