மேலூர் அருகே குடும்ப தகராறில் மனைவி அடித்துக் கொலை
மதுரை மேலூர் அருகே குடும்ப தகராறில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மேலூர்: மதுரை மேலூர் அருகே குடும்ப தகராறில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மேலூர் அருகே ஆடுகளம் ஊராட்சியில் உள்ளது உலகநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மதுரையில் ஆசாரி வேலை பார்க்கும் இவர் ஊரடங்கு வேலை என்று வீட்டில் இருந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான இவர் நேற்று இரவு தனது மனைவி சூரியாவுடன் (25) தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதில் மனைவி சூர்யாவை கிருஷ்ணமூர்த்தி சாரமாக கையால் தாகியுள்ளார். இதில், சுருண்டு விழுந்த சூர்யா உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்