பஞ்சாப் அரசியலில் மல்யுத்த வீரர் ’கிரேட் காளி’ 
தற்போதைய செய்திகள்

பஞ்சாப் அரசியலில் மல்யுத்த வீரர் ’கிரேட் காளி’

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளியை பஞ்சாபில் சந்தித்து பேசினார்.

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளியை பஞ்சாபில் சந்தித்து பேசினார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகின்றது. 

இந்நிலையில் பிரபல மல்யுத்த வீரரான கிரேட் காளியுடனான புகைப்படத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து தில்லி அரசின் செயல்பாடுகளுக்கு கிரேட் காளி பாராட்டு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மல்யுத்த வீரர் கிரேட் காளிக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரசிகர் பட்டாளத்தை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் கிரேட் காளி ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ஒன்றாக இணைந்து பஞ்சாபை மாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 10 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆரராக சம்மன்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT