தற்போதைய செய்திகள்

‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’: சிரோமணி அகாலிதளம்

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்காக பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என சிரோமணி அகாலிதளம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலிதளம் வெளியேறியது. மேலும் பாஜகவுடன் மத்தியில் அமைச்சரவையைப் பகிர்ந்திருந்த சிரோமணி அகாலிதள தலைவர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு சிரோமணி அகாலிதளம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்காக பாஜக கூட்டணியில் இணையப் போவதில்லை அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கின்றனர். இந்த மக்களின் தியாகத்தை நாடு கண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT