தற்போதைய செய்திகள்

கேரளத்தில் புதிதாக 23,260 பேருக்கு கரோனா தொற்று

DIN

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை (செப்.17) அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,260 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 131 பேர் உயிரிழந்தனர். 

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 23,260 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

கடந்த 24 மணி நேரத்தில் 20,388 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,56,697-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 131 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 23,296-ஆக உயர்ந்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 1,88,926 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT