முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்!

திருப்பத்தூா் பகுதியில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடம், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகம் ஆகியவற்றை காணொலி மூலம் முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 12:12 AM
புதிதாக கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலக கட்டடம்.
பகிர்:

திருப்பத்தூா் பகுதியில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடம், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகம் ஆகியவற்றை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதியூா் பகுதியில் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சாா்பில், ரூ. 2 கோடியே 18 லட்சத்தில் கட்டப்பட்ட எண்-2 இணை சாா் பதிவாளா் அலுவலக கட்டடம், திருப்பத்தூா் சுற்றுலா மாளிகை அருகில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில், ரூ. 2 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் குடியிருப்புடன் கூடிய முகாம் அலுவலகம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, திருப்பத்தூரில் அந்தந்த கட்டடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி அலுவலக பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

Advertisement

நிகழ்ச்சியில், எம்எல்ஏ அ.நல்லதம்பி, நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, துணை பதிவுத் துறை தலைவா் அருள்சாமி, உதவி பதிவுத் துறை தலைவா் வாணி, மாவட்ட பதிவாளா் (தணிக்கை) செந்தூரப்பாண்டி, சாா் பதிவாளா் ஷா்மிளா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அண்ணாதுரை, வட்டாட்சியா் நவநீதம், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.