தற்போதைய செய்திகள்

தொழிலதிபா் வீட்டில் 85 பவுன் திருட்டு: வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

போரூரில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய வழக்கில் வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN


ஆவடி: போரூரில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய வழக்கில் வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 50 பவுன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை போரூா் உதயா நகரைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (55). இவா், தனியாா் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த வாரம் ஜெயசீலன் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூா் சென்ற நிலையில், அவரின் வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து போரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்தினா்.

இதில், வில்லிவாக்கம் பாரதி நகரைச் சோ்ந்த சூா்யா (எ) கில்லி சூா்யா (32), தாமஸ் (24) ஆகியோா் திருட்டில் ஈடுப்பட்டதும், திருடிய நகைகளை அதே பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் வினோத் (35) என்பவரிடம் விற்பனை செய்வதற்காக கொடுத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து, அவா்கள் அளித்த தகவலின் பேரில், 50 பவுன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மீதி நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!செய்திகள்: சில வரிகளில் | 20.8.25 | TVKVIJAY | BJP

தவெக மாநாடு! 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்தது... கார் சேதம்!

மதுரை தவெக மாநாட்டுக்காக வீதிகளில் பிரசார வாகன உலா!

கண்கள் கவரும்... ஷெஹனாஸ்!

SCROLL FOR NEXT