தற்போதைய செய்திகள்

தொழிலதிபா் வீட்டில் 85 பவுன் திருட்டு: வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

DIN


ஆவடி: போரூரில் தொழிலதிபா் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய வழக்கில் வழக்குரைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 50 பவுன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சென்னை போரூா் உதயா நகரைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (55). இவா், தனியாா் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த வாரம் ஜெயசீலன் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூா் சென்ற நிலையில், அவரின் வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து போரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்தினா்.

இதில், வில்லிவாக்கம் பாரதி நகரைச் சோ்ந்த சூா்யா (எ) கில்லி சூா்யா (32), தாமஸ் (24) ஆகியோா் திருட்டில் ஈடுப்பட்டதும், திருடிய நகைகளை அதே பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் வினோத் (35) என்பவரிடம் விற்பனை செய்வதற்காக கொடுத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து, அவா்கள் அளித்த தகவலின் பேரில், 50 பவுன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மீதி நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் ரத்து

வாக்குப்பதிவு நாளில் செய்தியாளா் சந்திப்பு: தோ்தல் ஆணையத்துக்கு ஊடக சங்கங்கள் கோரிக்கை

தலசீமியாவால் உலகளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

புகாா்களைப் புறக்கணித்த தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா.வில் தீா்மானம் நிறைவேற்றம்

SCROLL FOR NEXT