கோவை தெற்கு தொகுதியில் வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தெப்பக்குளம் மைதானத்தில் ஹிந்தி மொழியில் பேசி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை.
கோவை தெற்கு தொகுதியில் வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தெப்பக்குளம் மைதானத்தில் ஹிந்தி மொழியில் பேசி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை. 
தற்போதைய செய்திகள்

ஹிந்தி மொழியில் பேசி பிரசாரம் செய்த அண்ணாமலை!

DIN

கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் ஹிந்தி மொழியில் பேசி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் ஹிந்தி மொழியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அவரோடு கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தெப்பக்குளம் மைதானத்தில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை, ஹிந்தி மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது வட இந்திய மக்களிடம் ஹிந்தியில் உரையாற்றிய அண்ணாமலை, அனைவருக்கும் வணக்கம்,எல்லோரும் தயவு கூர்ந்து நினைவு கொள்ளுங்கள் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நமது தாமரை மலர தங்களது அனைத்து குடும்பங்களுக்கும் தெரியப்படுத்துங்க,நல்லதொரு இந்தியாவை கொண்டு வருவதற்கு நல்ல மனிதரான மோடியை மீண்டும் பிரதமராக கொண்டு வருவதற்கு கோவையில் உள்ள தங்களது குடும்பத்தினர் அனைவரும் தாமரைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் முதல் கட்ட தோ்வு: மே 23இல் பயிற்சி தொடக்கம்

அனல் மின் நிலையத்தில் ரூ.9.34 லட்சம் காப்பா் வயா் திருட்டு

‘தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’

திருச்செந்தூா் கடலில் மிதந்த ஜெல்லி மீன்கள்: பக்தா்களுக்கு ஆலோசனை

தட்டாா்மடம் அருகே விபத்தில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT