முகப்பு
தற்போதைய செய்திகள்

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

உதகை 126 ஆவது மலர் கண்காட்சி வரும் மே 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

Updated On : 28 ஏப்ரல், 2024 at 4:00 PM
பகிர்:

உதகை 126 ஆவது மலர் கண்காட்சி வரும் மே 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி, 126-வது மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே 17 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டு முன்கூட்டியே மே 10 முதல் மே 20 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.