படம்: சென்னை காவல் துறை எக்ஸ் தளப் பக்கத்திலிருந்து... 
தற்போதைய செய்திகள்

மற்றொரு வழக்கில் பிரபல யூடியூபர் கைது!

‘பிரியாணி மேன்’ என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்த அபிசேக் ரபி கைது.

DIN

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட வழக்கில் ‘பிரியாணி மேன்’ என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்த அபிசேக் ரபி என்பவரை சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, சென்னை தேனாம்பேட்டை பகுதியைத் சோ்ந்த இளம்பெண் ஒருவா், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், தான் தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டு வரும் செம்மொழி பூங்கவையும் அதன் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், ஆபாசமான உடல்மொழி சைகைகளை விடியோ பதிவு செய்து அதை பிரியாணி மேன் எனும் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வரும் அபிசேக் ரபி என்பவா் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை தெற்கு மண்டல கணினிசாா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தார்.

இதன்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அபிஷேக் ரபியை (29) கைது செய்தனா்.

இந்த நிலையில், யூடியூபர் அபிசேக் ரபி மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை காவல் துறையின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட அபிஷேக் ரபி என்பவரை சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

‘திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு’

மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

பழனி உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்த மழைக்காலக் கூட்டத் தொடா்: திருச்சி சிவா

SCROLL FOR NEXT