ரெளடி ரோஹித் ராஜன்.  
தற்போதைய செய்திகள்

காவலர்களை தாக்கிய ரெளடி: சுட்டுப்பிடித்த போலீஸார்!

ரெளடி ரோஹித் ராஜன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.

DIN

சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரெளடி ரோஹித் ராஜனை காவல் துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

முன்னதாக, தேனியில் கைது செய்யப்பட்ட ரோஹித் ராஜனை, காவல் துறையினர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ரோஹித் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்க காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது, காவலர்கள் இருவரை ரெளடி ரோஹித் அரிவாளால் தாக்கி தப்பியோட முயற்சி செய்துள்ளார். தற்காப்புக்காக, ரோஹித்தை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ரோஹித் ராஜன் காயம் அடைந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோஹித் தாக்கிய இரு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரெளடி ரோஹித் ராஜன் மீது மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கு உள்பட 13 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT