திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீடீரென தீப்பிடித்து எரிந்ததில் நல்லவாய்ப்பாக பேருந்தில் இருந்த 27 பேரும் உயிர் தப்பினர். 
தற்போதைய செய்திகள்

தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்: நல்வாய்ப்பாக 27 பேர் உயிர்த்தப்பினர்

திருச்சியில் தனியார் பேருந்து டயர் வெடித்து தீடீரென தீப்பிடித்து எரிந்ததில் நல்லவாய்ப்பாக பேருந்தில் இருந்த 27 பேரும் உயிர்த்தப்பினர்

DIN

திருச்சி: நெல்லை மாவட்டம் திசையன்விளையிலிருந்து 27 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, திருச்சியில் டயர் வெடித்து தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 27 பேரும் உயிர்த்தப்பினர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்து மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தினை வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.10 மணிக்கு கடந்தபோது, பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து.

இதன் காரணமாக பேருந்தின் பின்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கவனித்த ஓட்டுநர் பேருந்தை மேம்பாலத்தின் மீது சாலையோரமாக நிறுத்திவிட்டு, பேருந்தில் இருந்த 27 பயணிகளையும் பத்திரமாக கீழே இறக்கி உள்ளார். சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்ட்டோன்மெண்ட் தீயணைப்பு படையினர் சுமார் 2.40 மணிக்கு சம்பவ இடத்து விரைந்து வந்து பேருந்தின் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

பின்னர், மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT