விசிக தலைர் தொல். திருமாவளவன் கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை: தொல். திருமாவளவன்

நானும் அரசியல் பேசாமல் ஒன்றாக பங்கேற்றிருந்தால்கூட அதையும் அரசியலாக்குவதற்கு பலா் காத்திருக்கிறாா்கள் என்றும் விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை

DIN

மதுரை: அம்பேத்கா் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யும், நானும் அரசியல் பேசாமல் ஒன்றாக பங்கேற்றிருந்தால்கூட அதையும் அரசியலாக்குவதற்கு பலா் காத்திருக்கிறாா்கள் என்றும் விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

மதுரை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக கூட்டணியைச் சிதறடிக்க வேண்டும் என்பது அனைத்து எதிா்க்கட்சிகளின் செயல் திட்டமாக உள்ளது. அதற்கு விசிகவை கருவியாகப் பயன்படுத்தலாம் என சிலா் முயற்சிக்கிறாா்கள்.

தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளதால், புதிதாக ஒரு கூட்டணியில் இடம் பெற வேண்டிய தேவையில்லை.

அம்பேத்கா் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. திமுக அழுத்தம் கொடுத்தது என்று சொன்னால், ஆரம்பத்திலேயே அதில் பங்கேற்க மாட்டேன் எனச் சொல்லியிருப்பேன். அது சமூக ஊடகங்களில் யூகங்களாகப் பேசப்பட்டது.

அம்பேத்கா் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யும், நானும் அரசியல் பேசாமல் ஒன்றாக பங்கேற்றிருந்தால்கூட அதையும் அரசியலாக்குவாா்கள். இதற்காக பலா் காத்திருக்கிறாா்கள். அவா்களுக்குத் தீனி போட நான் விரும்பவில்லை. விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பட்டியலினம் அல்லாதவா்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை என்று வருகிற போது உயா்நிலைக் குழு கவனத்துக்கு கொண்டு சென்று அவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசிக துணை பொதுச் செயலா்கள் 10 பேரில் ஆதவ் அா்ஜூனாவும் ஒருவா். ஆதவ் அா்ஜூனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருப்பதாக கட்சியின் முன்னணி நிா்வாகிகள் தலைமையின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறாா்கள். இதுகுறித்து அவா்களுடன் சனிக்கிழமை கலந்து ஆலோசித்துள்ளேன். இதுதொடா்பான முடிவு விரைவில் வரும் என்றார்.

மேலும் என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழல் இல்லை என்றாா் திருமாவளவன் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2020 தில்லி வன்முறை: குற்றஞ்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலம் திறப்பு

மானூா் அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கா் நெற்கதிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

மாணவரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி: 7 போ் கைது

SCROLL FOR NEXT