எதிர்நீச்சல் நாயகியின் புதிய தொடர் அறிவிப்பு!
மதுமிதா - அரவிந்த் நடிக்கும் அய்யனார் துணை தொடர்.
எதிர்நீச்சல் நாயகி மதுமிதா நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடர் எதிர்நீச்சல். இத்தொடர் கடந்த ஜூன் 8ஆம் தேதி 744 எபிஸோடுகளுடன் நிறைவு பெற்றது.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடிகை மதுமிதா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அவரே நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
Advertisement
Advertisement
ஆனால், எதிர்நீச்சல் 2 ஆம் பாகத்தின் தான் நடிக்கவில்லை என்று அவரே பதிவிட்டு இருந்தார். இவரின் பதிவு ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: ரஜினி - மணிரத்னம் படம் உறுதி?
இந்த நிலையில், நடிகை மதுமிதா பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் உடன் அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நடிக்கிறார்.
மேலும், இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இத்தொடரின் முன்னோட்டக் காட்சி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொடரை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடருக்குப் பிறகு, மீண்டும் சின்னத்திரையில் மதுமிதாவை காண்பதற்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.