முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.

Updated On : 17 டிசம்பர், 2024 at 8:04 AM
தமிழக அரசு
பகிர்:

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை(டிச. 14) காலமானார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் இன்று அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று பேரவை உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →