FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது : அமைச்சர் அன்பில் மகேஸ்

குழந்தைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

29 டிசம்பர் 2024, 8:16 pm IST
அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) - DIN
பகிர்:

மதுரை: குழந்தைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் மதுரையில் விண்ணில் விஞ்ஞானத் தேடல் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த முகாமில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 28 தகைசால் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8, 9, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி அறிவியல், ஸ்டெம், ரோபோடிக்ஸ், இணையவழிப் பாதுகாப்பு, தலைமைப் பண்புகள் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை, தஞ்சாவூா், திருநெல்வேலி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் குளிா்கால உண்டு உறைவிடப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

குழந்தைகளுக்கு பகுத்தறிவு, தலைமைப் பண்பு, சிந்திக்கும் ஆற்றல் ஆகியன மிகவும் அவசியம். சோற்றை (சாதம்) உருட்டி உண்ணும் குழந்தை பெற்றோரை உதறிவிடும் என்றொரு சொலவடை உண்டு. சூடாக இருக்கும் சோற்றை உருண்டையாக உருட்டி சாப்பிட்டால் அது செரிக்காது என்பது தான் அந்தச் சொலவடையில் உள்ள உண்மை.

எனவே, குழந்தைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, கல்வி அறிவுடன், பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது. இதையொட்டியே, இந்த முகாம் நடத்தப்படுகிறது.

மேலும், மாணவா்களுக்கு சிந்தனைத் தெளிவை ஏற்படுத்துவதிலும் இதுபோன்ற முகாம்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments