முகப்பு
தற்போதைய செய்திகள்

கம்பம்மெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து ஓட்டுநர் பலி!

தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலைச்சாலையில் பிக் அப் ஜீப் கவிழ்ந்து ஓட்டுநர் வியாழக்கிழமை பலியானார்.

Updated On : 22 பிப்ரவரி, 2024 at 2:57 AM
கம்பம்மெட்டு மலைச்சாலை தண்ணீர் வளைவு கவிழ்ந்து கிடக்கும் பிக் அப் ஜீப். அருகில் வாகனத்தின் கீழே சிக்கி பலியான ஓட்டுநர் உடல் .
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலைச்சாலையில் பிக் அப் ஜீப் கவிழ்ந்து ஓட்டுநர் வியாழக்கிழமை பலியானார்.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்திற்கு பிக்அப் ஜீப் வாகனத்தில் வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு கம்பம் மெட்டு மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தது. தண்ணீர் வளைவு என்ற இடத்தில் ஜீப் சென்று கொண்டிருந்த போது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஜீப் ஓட்டுநர் வாகனத்தின் கீழே சிக்கி பலியானார்.

விபத்து காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டதால் தமிழகத்திலிருந்து ஏலக்காய் வேலைக்கு கேரளத்துக்கு செல்லும் தொழிலாளர்கள் வாகனங்கள் கம்பம் மெட்டு மலைச்சலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →