சில்லறை பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!
சில்லறை பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!
உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால், அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஓராண்டில் குறைந்த அளவாக சில்லறை பணவீக்கம் கடந்த மே மாதம் 4.75 சதவிகிதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம் 5.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் 5.66 சதவிகிதமாகவும், நகர்ப்புறப் பகுதிகளில் 4.39 சதவிகிதமகவும் அதிகரித்துள்ளது.
உணவு பொருள்களின் பணவீக்கம் 9.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட 2 - 6 சதவிகித வரம்புக்குள் சில்லறை பணவீக்கம் இருந்த போதிலும், 4 சதவிகித அளவை தாண்டி இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாய் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.