பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தை கடும் சரிவு!
பட்ஜெட் எதிரொலியால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றினார். அதில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் பெரிதாக அறிவிக்கப்படாததால், இன்று காலை முதலே பங்குச்சந்தை இறக்கத்துடன் இருக்கிறது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 80724.30-ல் துவங்கிய சென்செக்ஸ் 726.97 புள்ளிகள் குறைந்து 79998.03-லும், 24568.30-ல் துவங்கிய நிஃப்டி 153.4 புள்ளிகள் குறைந்து 24346.23-லும் வர்த்தகமாகி வருகிறது. (12.58 மணி நிலவரப்படி).
இன்று இறக்கத்துடனே வர்த்தகம் நிறைவடையும் என்றே தெரிகிறது.
பட்ஜெட் எதிரொலியால் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றினார். அதில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் பெரிதாக அறிவிக்கப்படாததால், இன்று காலை முதலே பங்குச்சந்தை இறக்கத்துடன் இருக்கிறது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் 80724.30-ல் துவங்கிய சென்செக்ஸ் 726.97 புள்ளிகள் குறைந்து 79998.03-லும், 24568.30-ல் துவங்கிய நிஃப்டி 153.4 புள்ளிகள் குறைந்து 24346.23-லும் வர்த்தகமாகி வருகிறது. (12.58 மணி நிலவரப்படி).
இன்று இறக்கத்துடனே வர்த்தகம் நிறைவடையும் என்றே தெரிகிறது.