மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு!
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.84 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 91.63 டிஎம்சியாக உள்ளது.
விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதால், உபரி நீரை வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 16 கண் மதகுகள் வழியாக 75,000 முதல் 1.25 லட்சம் கன அடி வரை நீர் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், காவிரி கரையோரம் வசிக்கும் 11 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.