பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து!
தேஜகூ வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய செய்திகள்பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து!
தேஜகூ வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வாழ்த்து தெரிவித்ததாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சந்திரபாபு நாயுடுவும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகள் 175-ல் 158 தொகுதிகளில் தெலுங்கு தேசம் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கிறது.
தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியாக இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஒரு இடத்தில் வெற்றி பெற்று அபார வெற்றியை நோக்கி, தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை இருக்கின்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.