சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்: முதல்வர்
சட்டமன்றத் தேர்தலில் 200+ இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போதைய செய்திகள்சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்: முதல்வர்
சட்டமன்றத் தேர்தலில் 200+ இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் 200+ இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் முப்பெரும் விழா நடைபெறவுள்ள நிலையில், திமுக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் நாம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதுடன், தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 221 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ்!
மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களைத் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்கிறோம்.
அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும். அவை சரியான முறையில் மக்களிடம் சென்று சேர்வதையும் அதன் நீண்டகாலப் பயன்களையும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும்.
நாற்பதுக்கு நாற்பது என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும் என்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.