210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகையில், நமது கூட்டணி 210 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். 234 தொகுதிகளிலும் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.
234 தொகுதிகளிலும் தேனிக்களைப் போல, எறும்புகளைப் போல உழைக்க வேண்டும். நமக்கு எதிராக உள்ள கூட்டணி இதுவரை தேர்தல் பிரசாரத்தை தொடங்கவில்லை. தமிழகத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார்.
தமிழகத்திற்கு என்ன நிதி கொடுத்தீர்கள், என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என ஸ்டாலின் சொல்ல முடியுமா?. 15 ஆண்டுகள் மத்திய அரசில் பங்கு வகித்த திமுகவால் தமிழகத்திற்கு என்ன கிடைத்தது?. காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக.
மத்தியில் அமைச்சர் கிடைத்தாலும் அங்கேயும் ஊழல். ஊழல்களால் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக. அக்கட்சி அகற்ற தொணடர்கள் செயல்பட வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.