முகப்பு
தற்போதைய செய்திகள்

கள்ளச்சாராய மரணம்: இறந்தோரின் குடும்பத்தார், சிகிச்சை பெறுவோரை சந்திக்கும் இபிஎஸ்!

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தாரையும், சிகிச்சை பெறுவோரையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.

Updated On : 20 ஜூன், 2024 at 4:16 AM
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி(கோப்புப்படம்)
பகிர்:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள நிலையில், இறந்தோரின் குடும்பத்தாரையும், சிகிச்சை பெறுவோரையும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் அவரது துயரில் பங்குகொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.

ஆனால், இந்த சூழலில், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது.

மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி செல்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →