அரசுப் பணியாளர் தோ்வாணையம்  
தற்போதைய செய்திகள்

குரூப் 4 பணி: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நவ. 21 ஆம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்.

DIN

குரூப் 4 பணிக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்வதற்கு நவ. 21 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வினை 15.80 லட்சம் பேர் எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் அரசுப் பணியாளர் தோ்வாணையத்தின் இணையதளத்தில் அக். 28-ல் வெளியிடப்பட்டது.

கிராம நிா்வாக உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்பட 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில், 559 இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491-ஆக அதிகரிக்கப்பட்டது.

கடந்த நவ. 7-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் வெளியிட்டது.

டிஎன்பிஎஸ்சி இணைய தளம் மூலம் கணினி வழித்திரை சரிபார்ப்புக்கு நவ. 9 முதல் 21 வரை பதிவேற்றலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கனா... ரணாவத்!

கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி: அண்ணாமலை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்தது: டிரம்ப்

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஆயிஷா! வைல்டு கார்டு என்ட்ரி!

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT